Pages

Saturday, January 23, 2010

Will you forgive me?

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவன் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா? மன்னிப்பாயா? மன்னிப்பாயா?

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா? மன்னிப்பாயா? மன்னிப்பாயா?

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞன் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே எனை ஈர்கிராயே

மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஒரே அலை தான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைதேனே
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
மன்னிப்பாயா? மன்னிப்பாயா? மன்னிப்பாயா?

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண் கண் நீர் பூசல் தரும்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு

புலம்பல் எனசென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உன்னை நான் கொள்ளாமல் கொன்று புதைதேனே
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
மன்னிப்பாயா? மன்னிப்பாயா? மன்னிப்பாயா?

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால் தான் கலைஞை ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே எனை ஈர்கிராயே

மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

மேலும் மேலும் உருகி உருகி
உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோஹோ உன்னை எண்ணி எங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

2 comments:

Sriram said...

Please acknowledge that it was the lyrics of the song Mannipaaya from movie Vinnai Thaandi Varivaaya.

Unknown said...

@Sriram : Yes indeed its frm VTV