Pages

Sunday, August 15, 2010

என் தாய் நாட்டிற்கு சமர்பிக்கிறேன்

எனக்கு பசித்த போது நீ உணவைத் தந்தாய்
உன் நிலத்தில் நான் மரத்தைக் கூட நடவில்லை

என் உயிரைக் காக்க நீ மருத்துவரை தந்தாய் மும்பையில்
உன் ரத்தம் சிந்திய போது நான் உன்னிடம் இல்லை

பேசுவதற்கு பொன் மொழியான தமிழை தந்தாய்
நான் அதன் கொள்ளுப் பேரனான ஆங்கிலம் கற்றேன்

நீ அடிமை பட்ட போது நான் பிறக்கவில்லை
நான் பிறந்த பின்பு உன்னை காக்கவில்லை

எனக்கு உத்தியோகத்தைக் கொடுத்தாய் நானோ
அதை விட்டு அன்னியநாட்டுக்குப் பறந்தேன்

நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்டுத் திரிந்தேன்
கென்னெடியின் வரிகளை படிக்க வைத்து மன்னிப்பு கேட்க்கவைத்தாய்

என் பெயரை உன்னிடமிருந்து பெற்றுக் கொண்டேன் ஆனால்
உன் புகழை பரப்ப என்னால் முடியவில்லை

வேண்டியவற்றை அனைத்தையும் குடுத்தாய் உனக்கு
கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை

கொடுக்க ஒன்றும் இல்லாத போதும் வந்தே மாதரம்
என்று சொல்லி தலை வணங்குகிறேன்.

ஜெய் ஹிந்த்!!!!